Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை ஜியா கான் தற்கொலை: இந்தி கஜினியில் நயனதாரா ரோலில் நடித்தவர்
பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான்(25). இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் செட்டிலானார். கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் அண்மை காலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது வீட்டில் தற்கொலைக் கடிதம் ஏதும் சிக்கவில்லை. சம்பவம் நடந்தபோது அவரது தாயார் வீட்டில் இருந்துள்ளார்.
அவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நிஷப்த் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியா கானின் தற்கொலை தொடர்பாக அவரது பாய் பிரண்ட் சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் ஆவார்.