Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாயால் தூரிகையை வைத்து… சோனு சூட்டை ஓவியமாக வரைந்த தீவிர ரசிகர்… மெர்சலான வீடியோ!
சென்னை : பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையையை கவ்விக்கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்து உள்ளார்.
தலைகீழாக வரை ஆரம்பித்த அந்த ரசிகர். கலர் கலராக வண்ணமிட்டு இறுதியாக அந்த படத்தை திருப்பி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு... சிறப்பான சம்பவம்!
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
நிஜத்தில் ஹீரோ
பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவர் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.
பேருதவி
கொரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனு சூட்.
ஆம்புலன்ஸ் விமானம்
கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவி இந்த நேரத்தில், சோனு சூட் தன் சேவை பணியை தற்போது தொடர்ந்து வருகிறார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளம் பெண்ணை உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானத்தின் மூலம் ஹைதராபாத் அனுப்பி அந்தபெண்ணை காப்பாற்றினார்.
|
30 உயிர்களை காப்பாற்றினார்
அதேபோல, பெங்களுரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றி உள்ளார். இவரிடம் யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் உதவி செய்து வருகிறார். இதனால் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
ஓவியம் வரைந்த ரசிகர்
இந்நிலையில் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையையை கவ்விக்கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்துள்ளார். அதுவும் தலைகீழாக இருந்து வரைந்துள்ளார். அதற்கு கலர் கலராக வண்ணமிட்டு அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓவியருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.