Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்!
டெல்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து பாலிவுட் பிரபலங்களுடன் டெல்லியில் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்கள் மற்றும் கங்கனா ரனாவத், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளும் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறப்பாக செயல்படுவதாக மோடி புகழாரம்.
காந்தி 150
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் பிரதமர் மோடி நேற்று இரவு கலந்து ஆலோசனை நடத்தினார். காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறந்த பணியாற்றுவதாக மோடி பாராட்டினார்.
கான்களுடன் செல்ஃபி
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் ஷாரூக்கானுடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். நடிகர் அமீர்கான் எடுத்த அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மோடிக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், மகாத்மா காந்தியின் அறவழி போதனைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். அமீர்கானை தொடர்ந்து பேசிய ஷாரூக்கான், இந்தியாவிற்கும், உலகிற்கும் காந்தியை மீண்டும் நினைவு படுத்தவேண்டிய தருணம் இது என தனது கருத்தைக் கூறினார்.
பாலிவுட் நடிகைகளுடன் செல்ஃபி
பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.