Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் !
சென்னை : பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் ஆலியா பட் மாலத்தீவு சென்றுள்ளனர்.
பாலிவுட் முன்னணி நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
கொரோனா பாதித்த நிலையிலும் உதவியை நிறுத்தாத சோனு சூட்
சமீபத்தில் இவர்கள் இருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.
ஆலியா
கொரோனாவின் இரண்டாம் அலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குவாரன்டைனில் இருந்தபோது அவ்வப்போது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார்.
பயணம்
இந்நிலையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாக கடந்த 15ம் தேதி தெரிவித்தார் ஆலியா. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான வேகத்தில் தன் காதலரான நடிகர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுகளுக்கு கிளம்பிவிட்டார். ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மாலத்தீவு புறப்பட்டனர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் மாலத்தீவுகளுக்கு கிளம்பியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
குணமடைந்தார்
முன்னதாக ரன்பிர் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். ரன்பிருக்கு முன்பு அவரின் அம்மாவும், நடிகையுமான நீத்து கபூருக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டது. கெரியரை பொறுத்த வரை ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார்.