Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதறிப்போன ரசிகர்கள் !
மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் தீபிகாவிற்கு என்ன ஆச்சு என பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.
லைகாவே ரிலீஸ் செய்யும் பொன்னியின் செல்வன்..முக்கிய நிறுவனம் இல்லாமல் வெளியாகும் 2 பெரிய படங்கள்
நடிகை தீபிகா படுகோனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜான் ஆபிரகாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜவான்
பதான் தவிர, தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், தீபிகா படுகோனேவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீபிகாவுக்கு பல பரிசோதனைகளை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார்.
ரசிகர்கள் நிம்மதி
தீபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை சரி இல்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் வந்த பிறகே அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது இரண்டாவது முறை
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த 'Project K' படப்பிடிப்பின் போது தீபிகா படுகோனாவுக்கு இதய துடிப்பு அதிகரித்ததை அடுத்து, அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தீபிகாவுக்கு வாயு தொடர்பான பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் மீண்டும் 'Project K' படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார்.