அன்னையர் தினத்தில்… அறிய புகைப்படத்தை பகிர்ந்த கரீனா கபூர் !
மும்பை : பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
உலக சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.

பிரபல ஹீரோக்களுடன்
முன்னணி நடிகையாக வலம் வரும் கரீனா கபூர், ஷாருக்கான், அக்சய் குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவருக்கு எல்லைத்தாண்டியும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சைஃப் அலிகான்
இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

அன்னையர் தினம்
இந்நிலையில் இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் தாயாரின் புகைப்படத்தை பதிவிட்ட வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் , தனது அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரல்
அந்த புகைப்படத்தில் நடிகை கரீனா கபூர் , தனது அம்மா பபிதா கபூரின் கையில் ஃபிராக் அணிந்துக்கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் கரினாவின் அக்கா கரிஷ்மா கபூரும் மலர்களால் ஆன க்யூட் ஃபிராக் அணித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த த்ரோபேக் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











