Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!
மும்பை: பாலிவுட் சினிமாவில் நடிகைகள் செட்டில் பொண்டாட்டியை போன்று நடந்து கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் விளாசியுள்ளார்.
சுஷாந்த் மரணம் அடைந்ததில் இருந்தே பாலிவுட்டின் முகத்திரையை கிழித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
ஆரம்பத்தில் பாலிவுட்டில் நெப்போடிசம் இருப்பதாகவும் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
கொஞ்சம் பிளாஷ்பேக்: அந்த காரணத்துக்காக, கமல் படத்தில் இருந்து திடீரென விலகிய பாலிவுட் ஹீரோயின்!
வாட்ஸ்அப் சாட்
அதனை தொடர்ந்து சுஷாந்துக்கு தெரியாமலேயே அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி அவருக்கு போதை மருந்துகளை கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியானது. இது சுஷாந்த் ரசிகர்கள் மத்தியிலும் பாலிவுட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலர் சிக்குவார்கள்
அதன் பிறகு பாலிவுட்டில் போதை மருந்துகள் இல்லாமல் பார்ட்டியே நடக்காது என்றும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர் நடிகைகள் பல சிக்குவார்கள் என்றும் குண்டை தூக்கி போட்டார். அவரது இந்த பேச்சு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஸ்ட்டிங் கோச்
பிரபலங்கள் பலரும் கங்கனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் கங்கனா ரனாவத்தின் இந்த தைரியமான ஓபன் டாக்கிற்கு ஆதரவும் எழுந்தது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலிவுட் சினிமாவில் உள்ள காஸ்ட்டிங் கோச், அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் குறித்து பேசி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
படுக்கையை பகிர வேண்டும்
காஸ்டிங் கோச் பற்றி பேசிய கங்கனா ரனாவத், திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்றால் ஆண் நடிகர்கள் அல்லது திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களுடன் படுக்கையை பகிர வேண்டும். அப்படி செய்தால்தான் சினிமாத்துறையில் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்.
மனைவியை போல்..
நான் சினிமா இன்டஸ்ட்ரிக்குள் வந்தபோது, பெண்கள் ஐட்டம் டான்ஸ்க்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.. ஆனால் உங்களைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இருக்க வேண்டும். ஹீரோயின்கள் ஷுட்டிங் செட்டில் மனைவிகளைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.
சுஷாந்தின் மரணத்திலிருந்து
மேலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இது எல்லாம் சுஷாந்தின் மரணத்திலிருந்து தொடங்கியது. இன்டஸ்ட்ரியில் இருப்பவராக நான் வெளிப்படுத்த வேண்டியது நிறைய இருந்தது...
Recommended Video
வழக்குகாக உதவினேன்
நான் போதைப்பொருள் மோசடியை அம்பலப்படுத்தியதால், மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பைக் கேட்டேன். இதனால் ஒரு பெண்ணாக பொது வெளியில் பிரச்சனைகளை சந்தித்தேன், ஆனால் நான் வழக்குக்கு மட்டுமே உதவி செய்தேன். இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.