ஸ்ரீதேவியின் உயிரை குடித்துவிட்டதா 'பாலிவுட் பிரஷர்'? #Sridevi
Recommended Video

மும்பை: பாலிவுட் பிரஷர் ஸ்ரீதேவியின் உயிரைக் குடித்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலிவுட்டில் தனது நடிப்பு பயணத்தை துவங்கினார் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்றவர் இந்தி பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
ஸ்ரீதேவி என்றால் அவரின் அழகிய பெரிய கண்கள் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

பாலிவுட்
கோலிவுட்டில் இருந்த வரை தனது நடிப்பு மீது நம்பிக்கை வைத்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்றதும் அழகு மீது நம்பிக்கை வைத்தார். மூக்கு மற்றும் உதடுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது பாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்தது. ஆனால் தமிழ் ரசிகர்களோ ஏன் இந்த ஸ்ரீதேவி தேவையில்லாத வேலை பார்த்து அழகை கெடுக்கிறார் என்று வருத்தப்பட்டார்கள்.

அழுத்தம்
பாலிவுட்டில் எத்தனை வயதானாலும் சரி நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இதனால் நடிகைகள் தங்கள் உடல் நலத்தை பற்றி கவலைப்படாமல் பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து கொள்கிறார்கள்.

சர்ஜரிகள்
பாலிவுட்டில் செட்டிலான ஸ்ரீதேவி திறமையை விட்டுவிட்டு அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து கொண்டார். பாலிவுட் பிரஷரால் இயற்கையை விட்டு செயற்கை முறையை கையில் எடுத்தார்.

மரணம்
பிளாஸ்டிக் சர்ஜரிகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் பாலிவுட்டுக்காக துணிந்து செய்தார் ஸ்ரீதேவி. கேமராக்கள் முன்பு அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவரின் செயல் அவரின் உயிரை குடித்துவிட்டது.

பிடிக்கும்
ஸ்ரீதேவி நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து அழகை மேம்படுத்தாமல் இருந்து முகச்சுருக்கங்களுடன் இருந்திருந்தாலும் உங்களை ரசிகர்கள் கொண்டாடியிருந்திருப்பார்கள் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை. நடந்தது நடந்துவிட்டடது, உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.


Click it and Unblock the Notifications











