Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்
மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பின்னணி பாடகர் அங்கித் திவாரிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலிவுட் பாடகாரன அங்கித் திவாரி(24) நண்பர்கள் மூலம் தனக்கு பழக்கமான 28 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கித் திவாரியை கடந்த 8ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் தன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி அங்கித் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
அங்கித் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக அங்கித் தெரிவித்துள்ளார்.