Don't Miss!
- News பான் கார்டு இருக்குல்ல? பான் நம்பர் செயலிழந்துட்டால் இந்த 10 விஷயம் பண்ண முடியாது.. பான் அட்டை மேஜர்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எனக்கு வேணாம்.. நான் போறேன்.. விருட்டென்று கிளம்பிச் சென்ற ஆமிர்கான்!
மும்பை : சமூக வலைதளங்களில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக பாலிவுட் சூப்பர் நடிகரான அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இருப்பதை விட தனது வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமீர் கான் தனது 55 வது பிறந்தநாளை மார்ச் 14 ம் தேதி கொண்டாடினார். தனக்க பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமீர்கான், அத்துடன் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதையும் அறிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது கடைசி பதிவு இது தான் என குறிப்பிட்ட அமீர்கான், விரைவில் தான் அதிகாரப்பூர்வமாக ஒரு சேனல் ஆரம்பிக்க போவதாகவும், அதை தன்னை பற்றியும், தனது படங்கள் பற்றியும் அப்டேட்களை இனி தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் ரசிகர்களை எப்படி தொடர்பு கொண்டேனோ அதே போல் இனியும் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமிர் கான், கரீனா கபூருடன் இணைந்து லால் சிங் சாத்தா என்ற காமெடி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மனோ சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படம் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படமான ஃபாரெஸ்ட் கம்ப் என்ற படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.