Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மும்பை கற்பழிப்பை கண்டித்து சோனம் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள் போராட்டம்
மும்பை: மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.
மும்பை சக்தி மில்ஸ் பகுதியில் 22 வயது பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து மும்பையில் பத்திரிக்கைகாரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.
ஜாக்கர்ஸ் பார்க்
மும்பையில் உள்ள ஜாக்கர்ஸ் பார்க்கில் இருந்து ஆம்பிதியேட்டர் கார்டர் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர், ரேஷ்மா டிசோசா, பாடகி சோனா மொஹாபத்ரா, கரன்வீர் பொஹ்ரா, அவரது மனைவி டீஜே சித்து, குஷால் பஞ்சாபி, அபர்ணா பாஜ்பாய், சதீஷ் ரெட்டி, தலிப் தஹ்லில், எம்.எல்.ஏ. பாபா சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேனர்கள்
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்திச் சென்றனர்.
சோனம் கபூர்
கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்ட சோனம் கபூர் கூறுகையில், இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது கோழைத்தனமான செயல் என்றார்.
ஊர்வலம்
ஊர்வலத்தில் கண்டன வாசகங்கள் அடங்கிய பேனரை பிடித்துச் செல்லும் சோனம் கபூர்.
முன்னணி நடிகைகள்
ஊர்வலத்தில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் சோனம் கபூர் மட்டுமே கலந்து கொண்டார்.
சமூக அக்கறை
முன்னதாக கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு சோனம் கபூர் மக்களுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.
கற்பழிக்காதே
என்னை கற்பழிக்காதே, பாதுகாப்பான மும்பை வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி நிற்கும் பெண்கள்.