Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனை... பரபரப்பை கிளப்பிய போன் கால்!
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் விஜய்.
ஓமணப் பெண்ணே படக்குழு மீண்டும் இணையும் புதிய திரைப்படம்!
தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் திடீர் சோதனை
இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்
இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
மிரட்டல் விடுத்தது யார்?
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே பல நடிகர்களுக்கு..
அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் ஏற்கனவே பல்வேறு சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
அஜித் வீட்டுக்கு மிரட்டல்
இந்த நபர் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!