twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் என்ன தான் நடந்தது?: மவுனம் கலைத்த ஸ்ரீதேவியின் கணவர்

    By Siva
    |

    Recommended Video

    போனி கபூரின் சர்ப்ரைஸ் கிப்ட்டைப் பார்க்காமலேயே போன ஸ்ரீதேவி!- வீடியோ

    மும்பை: 24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன என்பது குறித்து போனி கபூர் சினிமா வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தாவிடம் தெரிவித்துள்ளார்.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் முழ்கி கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார். 24ம் தேதி இரவு துபாய் ஹோட்டல் அறையில் நடந்தது பற்றி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சினிமா வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தாவிடம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து கோமல் நஹ்தா கூறியிருப்பதாவது,

    சந்திப்பு

    சந்திப்பு

    22ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடந்த மீட்டிங் ஒன்றில் போனி கபர் கலந்து கொண்டார். அன்றைய தினம் ஸ்ரீதேவி துபாயில் தனது தோழிகளுடன் ஹோட்டல் அறையில் பேசி மகிழந்தார்.

    போன்

    போன்

    24ம் தேதி காலை போனி கபூர் ஸ்ரீதேவிக்கு போன் செய்து பேசியுள்ளார். நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா(ஸ்ரீதேவி தனது கணவரை அப்பா என்றே அழைத்து வந்தார்) என்று ஸ்ரீதேவி போனி கபூரிடம் தெரிவித்துள்ளார்.

    துபாய்

    துபாய்

    போனி ஸ்ரீதேவிக்கு சர்பிரைஸ் கொடுக்க விரும்பினார். அன்று மாலை தான் துபாய் செல்வதை போனி ஸ்ரீதேவியிடம் கூறவில்லை. 24ம் தேதி மதியம் 3.30 மணிக்கு கிளம்பிய விமானத்தில் துபாய் சென்றார் போனி.

    பயணம்

    பயணம்

    மாலை 6.20 மணிக்கு போனி ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார். டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்தார் போனி. அவர் துபாய்க்கு வருவார் என்று தனக்கு தோன்றியதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

    மனைவி

    மனைவி

    போனி தனது மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். டின்னருக்கு செல்வதற்காக குளிக்க ஸ்ரீதேவி பாத்ரூமுக்கு செல்ல போனி வேறு அறைக்கு சென்றுள்ளார்.

    பாத்ரூம்

    பாத்ரூம்

    15-20 நிமிடங்கள் ஆகியும் ஸ்ரீதேவி வெளியே வராததால் போனி கபூர் ஜான், ஜான் என்று அழைத்தும் பதில் இல்லை. ஆனால் குழாய் திறந்து தண்ணீர் ஓடும் சப்தம் மட்டும் கேட்டுள்ளது.

    மரணம்

    மரணம்

    போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்த மர்மம் தொடரும். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அது முக்கியம் இல்லை. அவர்கள் அன்பு வைத்திருந்த ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்றார் கோமல்.

    English summary
    Film trade analyst Komal Nahta has claimed that Bollywood diva Sridevi's filmmaker husband Boney Kapoor has opened up to him about his final meeting with his wife, a surprise that turned into a tragedy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X