அனில் அம்பானி மனைவி கொடுத்த பரிசை பார்த்து கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்
Recommended Video

மும்பை: தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி கொடுத்த பரிசை பார்த்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கதறி அழுதாராம்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி பிணமாக திரும்பி வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தாரை மட்டும் அல்ல திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஸ்ரீதேவி
தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவியும், முன்னாள் நடிகையுமான டீனாவும், ஸ்ரீதேவியும் நெருங்கிய தோழிகள். அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வார்கள்.

புகைப்படம்
துபாய் செல்ல 13 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவி தனது தோழி டீனா அம்பானியின் 61வது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் டீனா போனி கபூரை சந்தித்து பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

போனி
தனது பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த ஸ்ரீதேவியின் புகைப்படம் ஒன்றை அழகான வெள்ளி ஃபிரேமில் வைத்து போனி கபூரை சந்தித்து பரிசளித்துள்ளார் டீனா அம்பானி.

அழுகை
டீனா கொடுத்த பரிசை பார்த்ததும் போனி கபூரால் துக்கத்தை அடக்க முடியாமல் கதறி அழுதுள்ளார். தனது மனைவியின் புகைப்படத்தை மார்போடு வைத்துக் கொண்டு அழுதுள்ளார்.

மோஹித்
மோஹித் மர்வாவுக்கு டீனா அம்பானியின் அக்கா மகள் அந்தாராவை தான் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த திருமணத்திற்கு சென்ற இடத்தில் தான் ஸ்ரீதேவி உயிர் இழந்தார்.


Click it and Unblock the Notifications











