Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை ஓங்கி வயிற்றில் குத்திய மாமியார்
Recommended Video
ஹைதராபாத்: கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை போனி கபூரின் தாய் வயிற்றில் குத்தியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலின் பாத்ரூமில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
அவரது மறைவால் ரசிகர்கள் குறிப்பாக இயக்குனர் ராம் கோபால் வர்மா மிகுந்த கவலையில் உள்ளார்.
திட்டு
ஸ்ரீதேவியை அதற்குள் அழைத்துக் கொண்டதால் கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவியை கொன்றதால் கடவுளை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பம்
ஸ்ரீதேவி முதன்முறை கர்ப்பமாக இருந்தபோது போனி கபூரின் தாய் அவரின் வயிற்றில் ஓங்கி குத்தியதாக ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். போனி கபூர் மோனாவின் கணவராக இருந்தபோது தான் ஸ்ரீதேவியை காதலித்து தனது மனைவியையும், 2 குழந்தைகளையும் பிரிந்தார்.
மகிழ்ச்சி
ஸ்ரீதேவி எப்பொழுதுமே கவலையுடன் வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் பெரிதாக சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை. தனக்குள் நடப்பதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க யாருடனும் நெருங்கிப் பழகாமல் இருந்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.
கண்கள்
போனி கபூரை திருமணம் செய்த பிறகு ஸ்ரீதேவியை பார்ப்பவர்கள் அடிக்கடி சொன்னது அவர் கண்களில் சோகமும், கவலையும், பயமும் தெரிகிறது என்பது தான். ராம் கோபால் வர்மாவும் அதையே கூறியுள்ளார்.