Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... நடுரோட்டில் தள்ளாடிய நடிகர் சக்தி கைது!
நடிகர் சக்தி மதுபோதையில் கார் ஓட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை : இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி மதுபோதையில் கார் ஓட்டி மற்றொரு கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் பி.வாசு. இவரது மகன் சக்தி தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட இவர், விமர்சனத்துக்கு ஆளானார்.
ஓவியாவுடன் சண்டை, காயத்ரியுடன் சேர்ந்து அவர் பல பிரச்சினைகளில் ஈடுபட்டது என பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல சர்ச்சைகளில் சிக்கினார் அவர்.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி
காரில் பயணம்
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் வசித்து வரும் சக்தி, நேற்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது நண்பர் ஒருவரைப் பார்க்க தனது சொகுசு காரில் சென்றிருந்தார். அப்போது அவருடன் நண்பர் ஒருவரும் சென்றுள்ளார்.
கார் விபத்து
குறுகிய சாலை ஒன்றில் சென்ற போது, சக்தியின் கார் முன்னால் சென்ற செல்வம் என்பவரது ஆல்டோ கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் செல்வத்தின் காருக்கு சேதம் ஏற்பட்டது.
போலீசில் புகார்
ஆனால் விபத்தை ஏற்படுத்திய சக்தி, தனது காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் அவரது காரை சுற்றி வளைத்து பிடித்தனர். காருக்குள் நடிகர் சக்தி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், விபத்து தொடர்பாக சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குடிபோதையில் தள்ளாடிய சக்தி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து ஏற்படுத்திய போது சக்தி மது போதையில் கார் ஓட்டியதைக் கண்டுப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் சூளைமேடு போலீசார். பின்னர் அண்ணா நகர் அழைத்துச் செல்லப்பட்ட சக்தி மது அருந்தியது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
சக்தி கைது
ஆனால், காரை விட்டு இறங்க மறுத்து போலீசாருடன் ரகளை செய்துள்ளார் சக்தி. பின்னர் அவரை சமாதானப்படுத்தி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடமிருந்த கார், லைசென்ஸ், காரின் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஐபிசி மீது பிரிவு 279 மற்றும் மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சக்தியும் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சொந்த ஜாமீனில் சக்தி விடுவிக்கப்பட்டார்.
லைசன்ஸ் ரத்து
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத்தை கட்டி காரை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் சக்தியிடம் கூறியுள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமம் ஆறுமாதம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
தோழி காயத்திரி
ஏற்கனவே, சொகுசு காரை ஓட்டி பல திரையுலகப் பிரபலங்கள் விபத்தை ஏற்படுத்தி பிரச்சினையில் சிக்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் சக்தியின் நெருங்கிய தோழியாக வலம் வந்த நடன இயக்குனர் காயத்திரியும் இதேபோன்று குடித்துவிட்டு கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். நடிகர் சக்தியும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.