Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாகுபலியை தூக்கிச் சாப்பிட்ட பஜ்ரங்கி பைஜான்.. 12. நாளில் ரூ. 400 கோடியை அள்ளியது!
மும்பை: சல்மான் நடிப்பில் கடந்த ரம்ஜான் அன்று வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படம், சத்தமில்லாமல் வசூல் சாதனை படைத்துள்ளது. 12 நாட்களிலேயே அது ரூ. 400 கோடி வசூலை ஈட்டி பாகுபலி வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டமாக வந்த பாகுபலியின் வசூலை வீழ்த்தி வசூலில் வரலாறு படைத்து வருகிறது பஜ்ரங்கி பைஜான் திரைப்படம். பாகுபலி முதல் 17 நாட்களில் சுமார் 385 கோடியை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் 12 நாட்களிலேயே சுமார் 400 கோடியை வசூலித்து வரலாறு படைத்து இருக்கிறது பஜ்ரங்கி பைஜான்.
திரையிட்ட முதல் 2 நாட்களில் பெரிதாக வசூல் செய்யாத பஜ்ரங்கி பைஜான் அடுத்து வந்த நாட்களில் சுதாரித்துக் கொண்டது.
படத்தைப் பார்த்தவர்களின் கருத்துக்கள் படத்திற்கு ஆதரவாக மாறி சமூக வலைதளங்களில் பகிரப்பட, தற்போது வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது சல்மானின் படம்.
தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை கடுமையான போட்டி இந்த 2 படங்களுக்குத்தான் என்று கூறுகிறார்கள். 2 படங்களில் எந்தப் படம் வசூலில் முந்தப் போகிறது என்பது தெரியவில்லை.
இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால் பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் 2 படங்களுக்குமே திரைக்கதை எழுதியவர் ஒருவரே. அவர் வேறு யாருமல்ல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான்.
எனவே பஜ்ரங்கி பைஜான் வசூலில் முந்தினாலும் அதைப் பற்றி ராஜமௌலி கவலைப் படமாட்டார். அவிங்களுக்கே கவலை இல்லை. நாம ஏன் கவலைப்படனும்!