Don't Miss!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இருமுகன்.. சாதாரண நாளில் வெளியாகி 5.5 கோடியை அள்ளியது!
சென்னை: எந்த விசேஷமும் இல்லாத வார நாளான வியாழக்கிழமை வெளியாகி ரூ 5.5 கோடியை வசூலித்துள்ளது விக்ரம் நடித்த இருமுகன்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் நேற்று உலகெங்கும் 1000 திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகளில் வெளியானது.
நேற்று திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் 90 சதவீதத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டனர். ஒரு சாதாரண நாளில் இவ்வளவு கூட்டம் ஒரு படத்துக்குக் கூடுவது பெரிய விஷயமாகும்.
முதல் நாளில் மட்டும் ரூ 5.5 கோடிகளை ஆரம்ப வசூலாகப் பெற்றுள்ளது இருமுகன். இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கிட்டத்தட்ட இதே வசூல் தொடரும் நிலை. அடுத்த திங்கள் மட்டும் வேலை நாள். அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால் தொடர்ந்து 5 நாட்கள் படத்துக்கு நல்ல துவக்கம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்று தொடங்கி, வரும் செவ்வாய் வரையிலான ஆறு தினங்களில் இந்தப் படத்துக்கு போட்ட முதல் வசூலாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம் தவிர, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கணிசமான அரங்குகளில் இரு முகன் வெளியாகியுள்ளது.