Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகர் விக்ராந்தை பார்க்க திருமண வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்
மும்பை: பாலிவுட் நடிகர் விக்ராந்தை பார்க்க மணப்பெண் ஒருவர் திருமண வீட்டில் இருந்து ஓடி வந்துள்ளார்.
மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ள படம் சாபக். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் விக்ராந்த்.
விக்ராந்த் டெல்லியில் படப்பிடிப்பில் இருப்பது மணப்பெண் ஒருவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தாலி கட்டிக் கொள்ளாமல் விக்ராந்தை பார்க்க யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்துள்ளார்.
நீ யார்னு தெரியாதா, நீ யார்னு நான் சொல்லட்டா: ட்விட்டரில் சானியா மிர்சா, நடிகை மோதல்
மணக்கோலத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அந்த பெண் விக்ராந்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விக்ராந்த் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் அவரை உடனே பார்க்க முடியாது என்று பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட அந்த பெண் ஒரு மணிநேரம் அழுது புரண்டு அமர்க்களப்படுத்திவிட்டார்.
இதையடுத்து விக்ராந்த் வந்து அந்த பெண்ணை சந்தித்து பேசி வீட்டிற்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த பெண்ணோ நான் திரும்பிப் போக மாட்டேன் என்று கூறி அடம்பிடித்துள்ளார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் படக்குழுவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணால் படப்பிடிப்பு 4 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இது குறித்து விக்ராந்த் கூறியதாவது,
முதலில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண் அதுவும் திருமணம் நடக்கும் நாள் அன்று தாலி கட்டிக் கொள்ளாமல் என்னை பார்க்க வந்ததை நினைத்தால் வியப்பாக உள்ளது. அவர் பத்திரமாக வீடு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
என்னையும், என் நடிப்பையும் விரும்பி ரசிக்கும் மக்களுக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் சிலநேரம் ரசிகைகள் இப்படி செய்வது வினோதமாக உள்ளது என்றார்.
சாபக் படம் மூலம் தீபிகா படுகோனே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்திற்காக தீபிகா கடுமையாக உழைத்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் கதை தான் சாபக். படத்தில் தீபிகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போன்று மாறியதை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.