Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா... கமல் புகழாரம்! - வீடியோ
மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் கையெடுத்து கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்திய திரைத்துரையின் பழம்பெரும் இயக்குனரான 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்வி நிலையம் ஒன்றை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன் மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா என புகழாரம் சூட்டினார். 16 வயதினிலே படப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாரதிராஜா, தாய்ப்பாலுக்கு பிறகு நான் அதிகம் குடித்தது சினிமா பால் தான் என கூறினார். சினிமாவை தான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அது என்னுள் இருந்த உணர்வு என்றும் அவர் கூறினார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் அவரை கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவீர்கள் என்றார். இந்த வயதிலும் அவர் இளமையாக இருப்பதற்கு அப்போதுள்ள உணவு முறையும் அவரது உழைப்பும் தான் காரணம் என்றும அவர் கூறினார்.