Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா... கமல் புகழாரம்! - வீடியோ
மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் கையெடுத்து கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்திய திரைத்துரையின் பழம்பெரும் இயக்குனரான 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்வி நிலையம் ஒன்றை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன் மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா என புகழாரம் சூட்டினார். 16 வயதினிலே படப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாரதிராஜா, தாய்ப்பாலுக்கு பிறகு நான் அதிகம் குடித்தது சினிமா பால் தான் என கூறினார். சினிமாவை தான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அது என்னுள் இருந்த உணர்வு என்றும் அவர் கூறினார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் அவரை கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவீர்கள் என்றார். இந்த வயதிலும் அவர் இளமையாக இருப்பதற்கு அப்போதுள்ள உணவு முறையும் அவரது உழைப்பும் தான் காரணம் என்றும அவர் கூறினார்.