Don't Miss!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசு நிலம்.. நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்குப் பல கோடிக்கு விற்பனை.. திடீர் புகாரால் பரபரப்பு!
ஐதராபாத்: அரசுக்கு சொந்தமான நிலத்தை நடிகைகள், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட சில பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கோட்டா ரெட்டி. இவர், ஆதித்யா ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிறுவனர்.
இந்நிறுவனத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக பதவி வகித்தவர் சுதீர்ரெட்டி.
ஓட்டலில் வாக்குவாதம்.. சண்டையை விலக்கச் சென்ற நடிகைக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதி!
புறம்போக்கு நிலம்
இவர்கள் உறவினர்கள். இந்நிலையில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, பல முக்கிய பிரமுகர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு புறம்போக்கு நிலத்தை விற்பனை செய்தது அம்பலமாகி இருக்கிறது. இதுபற்றி ஜூம் வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீர் ரெட்டி, பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அனுமதியில்லை
தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ராவுரியாலா கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதை சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதியில்லை. இதை மறைத்து அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வெறும் ரூ.5 லட்சத்துக்கு கோட்டா ரெட்டி விலைக்கு வாங்கினார். பின்னர், அதை ஒரு ஏக்கர் ரூ.1 கோடி என்று விற்றார்.
நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்
இதில், கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார். கடந்த ஜூன் மாதத்தில் பிரபல நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த 5 எம்பிக்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்.
Recommended Video
மோசடி செய்துள்ளார்
விற்பனை செய்யும் போது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார். இவ்வாறு சுதீர் ரெட்டி கூறினார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த மோசடி வெளிவந்திருப்பது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!