Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எனக்கு எதிராக சதி நடக்கிறது.. புவனேஸ்வரி
தியேட்டரில் வன்முறையில் ஈடுபட்டது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை போலீஸார் இன்று 3 வழக்கில் ஆஜர்படுத்தினர்.
அப்போது கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த புவனேஸ்வரி போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம், என் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வதற்கு சதி வேலையே காரணம். இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் விரைவில் இந்த சதிகள் அம்பலமாகும். சட்டப்படி என் மீதான வழக்குகளை சந்திப்பேன் என்றார்.
மனம் கோணாதபடி கவனிக்குமாறு கூறிய போலீஸ் அதிகாரி
இதற்கிடையே புவனேஸ்வரியை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுமாறு ஒரு போலீஸ் அதிகாரி, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பரிந்துரைத்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.