Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எனக்கு எதிராக சதி நடக்கிறது.. புவனேஸ்வரி
தியேட்டரில் வன்முறையில் ஈடுபட்டது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை போலீஸார் இன்று 3 வழக்கில் ஆஜர்படுத்தினர்.
அப்போது கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த புவனேஸ்வரி போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம், என் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வதற்கு சதி வேலையே காரணம். இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் விரைவில் இந்த சதிகள் அம்பலமாகும். சட்டப்படி என் மீதான வழக்குகளை சந்திப்பேன் என்றார்.
மனம் கோணாதபடி கவனிக்குமாறு கூறிய போலீஸ் அதிகாரி
இதற்கிடையே புவனேஸ்வரியை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுமாறு ஒரு போலீஸ் அதிகாரி, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பரிந்துரைத்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.