Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தற்கொலை செய்துகொண்ட சித்ராவுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்.. 'கால்ஸ்' இயக்குனர் தகவல்!
சென்னை: தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாராதான் ரோல்மாடல் என்று கால்ஸ் படத்தின் இயக்குனர் சொன்னார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் சித்ரா.
சின்னத்திரை நடிகையான இவர், அந்த தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே அந்த கேரக்டர் வரவேற்பை பெற்றது.
தற்கொலை செய்துகொண்ட சித்ரா.. ஆசையாக வாங்கிய அந்த நைட்டி.. 'கால்ஸ்' இயக்குனர் உருக்கம்!
நட்சத்திர ஓட்டல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தினம் சென்றுவர கஷ்டமாக இருந்ததால், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார், சித்ரா.
பதிவு திருமணம்
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவுக்கும் ஹேமந்த் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பர்ஸ்ட் லுக்
அப்போது முதலே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் மற்றும் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்ரா நடித்த முதல் திரைப்படம், கால்ஸ். இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
தேவதர்ஷினி
இந்தப் படத்தை இன்பினைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக சித்ரா நடித்துள்ளார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜெ.சபரிஷ் இயக்கியுள்ளார்.
கொரோனா தடை
படம் பற்றி இயக்குனர் சபரிஷிடம் கேட்டோம். அவர் கூறும்போது, கடந்த ஜனவரி மாதமே இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தபோது கொரோனாவால் தடைபட்டது. பின்னர் செப்டம்பரில் வேலையை தொடங்கினோம். ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வெள்ளித்திரை
அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் நாயகி சித்ரா தற்கொலை செய்துவிட்டார். இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் கனவு, வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது. அதற்குள் அவர் மறைந்ததை நம்ப முடியவில்லை. இந்த படத்தில் நந்திதா என்ற கேரக்டரில் சித்ரா நடித்துள்ளார்.
நயன்தாரா போல
அவருக்கு நடிகை நயன்தாராதான் ரோல் மாடல். அவர் போலவே உடைகள் அணிய வேண்டும் என்று விரும்புவார். நயன்தாரா, வேறு சில படங்களில் பண்ணியது போல உடைகளை அணிந்து இந்தப் படத்தின் சில காட்சிகளிலும் நடித்துள்ளார் என்று கூறினார்.