Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'
ப்ளாக் என்பபடும் வலைப்பூவில் விமர்சனம் எழுதி வந்தவர் கேபிள் சங்கர். இவர் முதல்முறையாக ஒரு முழு நீளப் படம் எடுக்கிறார். தலைப்பு தொட்டால் தொடரும்.
வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா?
இந்தக் கேள்வி, அவர் படம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்கிறது.
அவர் என்ன பதில் சொல்கிறார்?
'நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க வந்திருக்கிறேன். விமர்சகனாக வெற்றி பெற்று அந்த அடையாளம் பெற்று விட்டதால் இப்படிக் கேள்வி வருகிறது.
நிச்சயம் இது நியாயமான கேள்விதான். நிச்சயமாக விமர்சனம் மட்டும் செய்பவர்கள் படமெடுக்க முடியாதுதான். ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விமர்சகர்களும் அந்த தகுதியை வைத்துக் கொண்டு படமெடுக்க முடியாது. ஆனால் விமர்சகர்கள் இயக்குநர்களாகியும் இருக்கிறார்கள்.
நான் வெறும் விமர்சகனல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி பல துறைகளில் ஈடுபட்டு அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன். தியேட்டர் நடத்தியிருக்கிறேன். விநியோகம் செய்துள்ளேன். பல கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். வசன உதவி, திரைக்கதை உதவி என்று பணியற்றிய அனுபவம் உண்டு. உதவி
இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என்று பலதரப்பட்ட பணிகளை செய்துள்ளேன். ஏன் போஸ்டர் கூட ஒட்டியுள்ளேன்," என்கிறார்.
காதல் த்ரில்லர் வகைப் படமாக உருவாகியுள்ளதாம் இந்த தொட்டால் தொடரும். படத்தை பலருக்கும் போட்டிக் காட்டினாராம் இயக்குநர். யாரும் குறை சொல்லவில்லை என்பதால் நம்பிக்கையுடன் விரைவில் படத்தை வெளியிடவிருக்கிறார்.