twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏசியில் அமர்ந்து ட்வீட்டில் கவலையை காட்ட முடியாது.. அது என் கடமை.. பிரபல வில்லன் நடிகர் உருக்கம்!

    By
    |

    சென்னை: ஏசியில் அமர்ந்து ட்விட்டில் கவலையை காட்ட முடியாது என்பதால் இறங்கி வேலை செய்கிறேன் என்று பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.

    உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

    ரொம்ப மிஸ் பண்றேன்.. காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு ஃபீலாகும் விவாகரத்து நடிகர்!ரொம்ப மிஸ் பண்றேன்.. காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு ஃபீலாகும் விவாகரத்து நடிகர்!

     நட்சத்திர ஓட்டல்

    நட்சத்திர ஓட்டல்

    இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு தனது நட்சத்திர ஓட்டலை வழங்கினார்.

     கொரோனா வாரியர்ஸ்

    கொரோனா வாரியர்ஸ்

    இதுபற்றி சோனு சூட் கூறும்போது, மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு... அந்த கொரோனா வாரியர்ஸுக்கு என்னாலான உதவியை செய்வது பெருமை' என்று தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு அவர் உணவும் கொடுத்து வந்தார்.

     பேருந்து வசதி

    பேருந்து வசதி

    இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் செல்ல, பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் வில்லன் கேரக்டரில் நடிக்கும் சோனு சூட்டை, ஹீரோ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

     ஏசி அறையில்

    ஏசி அறையில்

    இதுபற்றி சோனு சூட் கூறியதாவது: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவது கடமை. நெடுஞ்சாலைகளில் அவர்கள் குழந்தைகளுடனும் குடும்பத்தினருடன் செல்வதை பார்த்திருக்கிறோம். அதைப் பார்த்துவிட்டு, சாலைகளில் இறங்காதவரை, அவர்களில் ஒருவராக மாறாத வரை, ஏசி அறையில் உட்கார்ந்தபடி ட்வீட்டில் கவலையை தெரிவிக்க முடியாது. இல்லை என்றால் நமக்காக யாரோ ஒருவர் காத்திருப்பார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

     சொந்த ஊருக்கு

    சொந்த ஊருக்கு

    தினமும் எனக்கு மெசேஜ்களும் மெயில்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரின் கோரிக்கையும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். இரவில் என்னால் தூங்க முடியவில்லை. அவர்களை, அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி குடும்பத்தினருடன் சேர்த்துவிட விரும்புகிறேன்.

    Recommended Video

    மகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்
     ஒரே வேலை

    ஒரே வேலை

    காலையில் இருந்து மாலை வரை இந்த வேலையைதான் செய்து வருகிறேன். லாக்டவுன் முடியும் வரை எனது ஒரே வேலை, இதுதான். எனக்கு வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியை சந்தோஷத்தை, இது கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    இவர், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

    English summary
    Sonu Sood says, 'We Can't Show Concern For Migrants By Sitting In AC And Tweeting'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X