Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'மனுஷன நம்புறதவிட பேயை நம்பலாம்'... திரையுலகமே இப்டி சொன்னா எப்டி!
மனிதர்களை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுக்கலாம் என திரையுலகினர் உறுதியாக நம்புகின்றனர்.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவே பேய் படங்களை நம்பி தான் இருக்கின்றன என்பது போல் பிரபல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பேசியது வியப்பாக உள்ளது.
தீபன் நாராயண் இயக்கத்தில் அரசு, மோனா நடித்துள்ள படம் 'பேய் எல்லாம் பாவம்'. அப்புக்குட்டி, மைம் கோபி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
'பேய் எல்லாம் பாவம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட இயக்குனர்கள், பேரரசு, ஏ.வெங்கடேஷ், ராசி அழகப்பன், ஜாகுவார் தங்கம், பிக் பாஸ் ஸ்நேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேசிய அனைவரும் பேயை சிலாகித்து பேசினர். பேய் எடுத்தால் போட்ட பணத்தில் 75 சதவீதம் திரும்பக் கிடைப்பது உறுதி என தெரிவித்தனர். பேயை நம்பினோர் கைவிடப்படார் என்றும் அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராசி அழகப்பன் கூறியதாவது," பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேய்யை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் சாமளான். பாண்டிச்சேரியில் இருந்து அமெரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் வரும் பேய்யோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்த பேய் நன்றாக டான்ஸ் ஆடுகிறது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது.
வியாபார ரீதியாக பார்த்தால், பேய் படங்களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிட பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்", என அவர் கூறினார்.
இதே கருத்தை தான் இயக்குனர்கள் பேரரசு, வெங்கடேஷ், பாடலாசிரியர் ஸ்நேகன், பி.ஆர்.ஓ. பெருதுளசி பழனிவேல் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!