Just In
- 12 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 27 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 1 hr ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- News
போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Sports
107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
த்ரிஷா நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் ஆட்களுக்கும் சம்பந்தமே இல்லை... ஏற்பாட்டாளர்கள் விளக்கம்!
டொரன்டோ: கனடாவில் த்ரிஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்களுக்கும் தொடர்பே இல்லை. இது முழுக்க முழுக்க ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த மார்ச் 29-ம் தேதி தமிழ் ஒன் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் த்ரிஷா.

இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்ட கனடிய தமிழ் இணையதளங்கள் சில, 'டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டிருக்கிறார். இது தமிழர் விரோத செயல்,' என்று கண்டித்திருந்தனர்.
இதுகுறித்து நாமும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் தமிழ் ஒன் மற்றும் வணக்கம் எப்எம் நிறுவனத்தினர்.
அவர்கள் அளித்துள்ள விளக்கம்:
கனடிய தமிழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கம் ஊடகம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஒரு நல்ல நோக்கத்துக்காக நடந்த விழா இது. இதனை பிரபலப்படுத்தவே சென்னையிலிருந்து நடிகை த்ரிஷாவை அழைத்தோம்.
விழாவில் SAAC அமைப்பு சார்பில் 25000 டாலர்களை 120 ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு த்ரிஷா கையால் வழங்கினோம். மேலும் இந்தக் குழந்தைகளுக்கு உதவ 10 பேர் தலா 1500 டாலர் செலுத்தி ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தனர்.
இந்த நல்ல நோக்கம் கொண்ட நிகழ்ச்சியை டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் செய்ததாக கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.