Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா? விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்!
பெங்களூரு: போதையில் கார் ஓட்டியதால் விபத்தில் சிக்கியதாக சொல்வதா என்று நடிகை ஆவேசம் அடைந்தார்.
Recommended Video
பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய 'மிரட்டல்' படத்தில் நடித்திருந்தார்.
திடுதிப்புன்னு முடிய வெட்டிய பிரபல நடிகை.. காரணத்த கேட்டா ஆடிப்போயிடுவிங்க..!
ஆக்ஷன் காமெடி
இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். சந்தானம், பிரபு, பிரதீப் ராவத், பாண்டியராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் விஷ்ணுவர்தன் பாபு, ஜெனிலியா நடிப்பில் வெளியான தீ படத்தின் ரீமேக் இது. ஆக்ஷன் காமெடி படமான இது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் பெரிய வெற்றியை பெறவில்லை.
சண்டக்காரி
இதையடுத்து, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சில படங்களை தமிழில் தயாரித்தார். விமல், ஆஸ்னா ஜாவேரி நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை தயாரித்தார். அடுத்து இப்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி, அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடித்துள்ள நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.
பாலத்தில் மோதியது
கன்னட படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். கொரோனா காரணமாக இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் சென்றுகொண்டிருந்தார். பெங்களூரில் உள்ள ஹைகிரண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட வசந்த் நகரில் வந்தபோது, பாலம் ஒன்றின் தூணில் திடீரென்று கார் மோதியது.
எலும்பு முறிவு
இதில் நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார். அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
வயிற்றுவலி
பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நடிகை ஷர்மிளா இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு கடுமையான வயிற்றுவலி. அதனால் என் நண்பர் லோகேஷ், வாகனத்துக்கான பாஸ் வைத்திருந்த நண்பர் டான் தாமஸ் ஆகியோரிடம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் செல்லுமாறு சொன்னேன்.
எதிர்பாராத விபத்து
அவர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. நான் அப்போது கார் ஓட்டவில்லை. பின்னால் தான் அமர்ந்திருந்தேன். நண்பர் டான், கார் ஓட்டினார். இந்த விபத்தில் என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் நடந்தது.
உண்மை தெரியாமல்
அதற்குள் பார்ட்டிக்கு சென்றேன், போதையில் கார் ஓட்டினேன் என்று கதை கட்டி விட்டார்கள். இந்த கொரோனா நேரத்தில் சமூக விலகலைப் பற்றி வலியுறுத்தி வருபவள் நான். நான் எப்படி பார்ட்டிக்கு போவேன்? உண்மை தெரியாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார், ஷர்மிளா.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!