Don't Miss!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
எப்பவும் பெப்பர் ஸ்பிரே, பாக்கெட் கத்தி வைச்சுக்கோங்க... இது அபிராமியின் அட்வைஸ்!
சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக எப்போதும் தங்களது கைப்பையில் பெண்கள் பெப்பர் ஸ்பிரேயும், பாக்கெட் கத்தியும் வைத்திருந்தால் நல்லது என பெண்களுக்கு நடிகை அபிராமி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், முன்னெப்போதும் இருந்ததை விட இந்த மகளிர் தினத்தைப் பெண்கள் வித்தியாசமான எழுச்சியுடன் தான் கொண்டாடி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், நடிகை அபிராமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் மகளிர் தினத்தன்று பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பெப்பர் ஸ்பிரே...
பெண்கள் அனைவரும் எப்போதும் பெப்பர் ஸ்பிரேயையும், பாக்கெட் கத்தியையும் எடுத்துச் செல்லுங்கள். யாராவது அத்துமீற நினைத்தால் கத்தி கலாட்டா செய்து, ஏண்டா இப்படி நடந்துகிட்டோம் என்று அவனே ஃபீல் பண்ணும்படி செய்யுங்கள்.
முதலில் எச்சரியுங்கள்...
ஆண் நண்பர் தவறாக நடக்க முயன் றால், அவர்களிடம் அதை குறிப்பிட்டு நீங்கள் செய்வது தவறு என்று முதலில் எச்சரிக்கை செய்யுங்கள். எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் அவர்களை தாக்குங்கள்.
அமைதியாக இருக்காதீர்கள்...
எது செய்தாலும், அவர்கள் உங்களை தொடுவதற்கு வருந்துகிற அளவுக்கு இருக்க வேண்டும். அத்துடன் அமைதியாக இருந்துவிட வேண்டாம். அதுபற்றி இணையதளத்தில் தெரிவியுங்கள். அதே சமயம் பெண்கள் கவனமாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
36 வயதினிலே...
விருமாண்டி, வானவில் உட்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகை அபிராமி, திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மூலம் திரும்பவும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
-
தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?