Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சர்கார் படத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு.. நாளையே விசாரணை
சென்னை: சர்கார் படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்த நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று ராஜேந்திரன் என்பவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் நாளையே விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. படத்திற்காக ஆரவாரத்துடன் காத்திருக்கும் நிலையில் இப்படி திடீரென விவகாரம் வெடித்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.