Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘வேலையில்லா பட்டதாரி’க்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் புகைப் பிடிக்கும் காட்சிகளை அகற்றக் கோரி ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தனுஷ், அமலாபால் நடித்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிரில் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது :-
வேலையில்லா பட்டதாரி...
நடிகர் தனுஷ், நடிகை அமலாபால் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் கடந்த ஜூலை 18-ந்தேதி வெளியானது. இந்த படத்தில், புகைப்பிடிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளது.
விழிப்புணர்வு வாசகம்...
திரையில் அந்த காட்சிகள் வரும்போது, புகைப் பிடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகம், மிகவும் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் படம் பார்ப்பவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இல்லை.
நடவடிக்கை இல்லை
எனவே, இந்த காட்சிகளை நீக்கவும், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு கடந்த ஜூலை 25-ந் தேதி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தள்ளுபடி...
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘மனுதாரர் அரசுக்கு புகார் அனுப்பி அடுத்த சில நாட்களில் இந்த ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க அவகாசம் வழங்காமல், இந்த வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.