Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அனுமதியின்றி பிரசாரம்: நடிகர் செந்தில், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு
நாகர்கோவில் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து நடிகர் செந்தில் நேற்று ராஜாக்கமங்கலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். நடிகர் செந்தில் பிரசாரம் செய்வதற்கு அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது. அதன்படி ராஜாக்கமங்கலம் பகுதியில் அனுமதியின்றி நடிகர் செந்திலை வைத்து பிரச்சாரம் செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போல் வடசேரி அண்ணா பேருந்து நிலையம் முன்பும் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து செந்தில் பிரசாரம் செய்தார். இதற்கும் அனுமதி வாங்கவில்லை. இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியான ரகமத்துல்லா அளித்த புகாரின்பேரில் நடிகர் செந்தில், அதிமுக நிர்வாகி சகாய ராஜ் உள்ளிட்டோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.