Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அனுமதியின்றி பிரசாரம்: நடிகர் செந்தில், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு
நாகர்கோவில் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து நடிகர் செந்தில் நேற்று ராஜாக்கமங்கலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். நடிகர் செந்தில் பிரசாரம் செய்வதற்கு அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது. அதன்படி ராஜாக்கமங்கலம் பகுதியில் அனுமதியின்றி நடிகர் செந்திலை வைத்து பிரச்சாரம் செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போல் வடசேரி அண்ணா பேருந்து நிலையம் முன்பும் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து செந்தில் பிரசாரம் செய்தார். இதற்கும் அனுமதி வாங்கவில்லை. இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியான ரகமத்துல்லா அளித்த புகாரின்பேரில் நடிகர் செந்தில், அதிமுக நிர்வாகி சகாய ராஜ் உள்ளிட்டோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.