Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா விதிமுறைகளை மீறி நீர்வீழ்ச்சிக்குச் செல்வதா? பிரபல ஹீரோ மீது பரபரப்பு புகார்!
ஐதராபாத்: கொரோனா விதிமுறைகளை மீறி நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றதால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம், புஷ்பா.
சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
ஆரவ் முதல் லாஸ்லியா வரை.. போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பை அள்ளித் தரும் தாராள பிரபு பிக்பாஸ்!
வித்தியாசமான கெட்டப்
பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியானபோதே பரபரப்பானது.
விஜய் சேதுபதி
இந்த போஸ்டர் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்புக்கு அனுமதி
பின்னர் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகி விட்டார். இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக புதிய படங்களுக்கான ஷூட்டிங் தடைபட்டிருந்தது. 6 மாத காலத்துக்குப் பிறகு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஷூட்டிங்கை நடத்த பல இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.
குண்டலா நீர்வீழ்ச்சி
இந்நிலையில், ‘புஷ்பா'படப்பிடிப்புக்கான இடத்தைப் பார்க்க, படக்குழுவினர் சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் குண்டலா நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றனர். கொரோனா காரணமாக இந்த பகுதிக்குச் செல்ல அரசு தடை விதித்திருந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார். இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
நடவடிக்கை
கொரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தச் சென்றதால் இந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், அதிலாபாத் நெரடிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.