விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்டில் நடந்த தள்ளுமுள்ளு..சுரேஷ் சந்திரா உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸில் புகார்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, மோதல் காரணமாக சுரேஷ் சந்திரா உள்ளிட்ட 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதனை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

விக்னேஷ் சிவனிடம் பேச முற்பட்ட போது, சுரேஷ் சந்திரா அவரையும் அவரது நிறுவனத்தையும் திட்டியதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil
விக்கி நயன் திருமணம்

விக்கி நயன் திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது காதலிக்கத் துவங்கினர். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசான நிலையில், தங்கள் திருமணத்தை செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான தேதி மற்றும் இடத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் இந்த திருமணம் நடைபெற உள்ளது.

விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்

விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்

திருமணத்தை முன்னிட்டு இன்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தன்.

சுரேஷ் சந்திரா வாக்குவாதம்

சுரேஷ் சந்திரா வாக்குவாதம்

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சில செய்தியாளர்கள் பேச முயற்சி செய்துள்ளனர். அப்போது செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, தனியார் செய்தியாளர் ஆனந்தனிடம் , நீ யார் என்று ஒருமையில் கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிறுவனம் குறித்தும் அவர் தகாத வார்த்தை கூறியதாக செய்தியாளர் தரப்பில் கேள்வி எழுப்ப அங்கு வாக்குவாதம் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

மோதல் வெடித்தது

மோதல் வெடித்தது

இதன் தொடர்ச்சியாக. மன உளைச்சல் அடைந்த செய்தியாளர் ஆனந்தன் , மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவிடம், எப்படி எங்கள் நிறுவனம் குறித்து தவறாக சொல்லலாம்? என கேள்விகள் எழுப்பியுள்ளார். இணக்கமற்ற சூழலில் சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் / நண்பர்கள் குறிப்பாக நாசர் மற்றும் தியாகு ஆகியோர் செய்தியாளர் ஆனந்தன் மீது கை வைத்து தள்ளி மிரட்டியுள்ளனர்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

மேலும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஆனந்தன் இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வ புகார் அளித்துள்ளார். தன்னை சுரேஷ் சந்திரா அவரது நண்பர்கள் இருவர் தகாத வார்த்தைகளால் தனது நிறுவனம் பற்றி பேசி திட்டி தன்னையும் தள்ளிவிட்டதாக புகாரில் தெரிவித்ததன் பேரில் போலீஸார் சி.எஸ்.ஆர் வழங்கியுள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், "இது அத்துமீறல் - அநாகரீக மிரட்டல் என எனக் கண்டித்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக பல இடங்களில் நிகழ்வுகளில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள், அவமதிப்புகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல. பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதும் அவர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுவதுமே நல்ல சமுகத்தின் நல்லடையாளம்" என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X