Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: எந்நேரத்திலும் கைதாகலாம் என தகவல்!
சென்னை: மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். மாடலான மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் என பிரபலங்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்.
'அதுதான் பாஸ் பண்ணிவிட்டுருவோமே..' ஆன்லைன் தேர்வில் குளறுபடி.. பிக் பாஸ் நடிகை ஆவேசப் புகார்!
ஆபாச வார்த்தை
நடிகர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஆபாச வார்த்தைகளால் பேசி வருகிறார் மீரா மிதுன். இதனால் கடுப்பான சூர்யா மற்றும் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கண்டப்படி விமர்சித்து வருகின்றனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவது வரை சென்றுவிட்டனர் ரசிகர்கள்.
மீரா மிதுன் மீது புகார்
நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
5 பிரிவுகளின் கீழ்
இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைதாகலாம்?
இதனால் மீரா மிதுன் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல்துறையிலும் மீரா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியி காவல் துறையிலும் மீரா மிதுன் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?