Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. காதல் கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. போலீசார் வழக்கு பதிவு!
கட்டாக்: தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல ஒரிய மொழி நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பிரபல ஒரிய நடிகருமான அனுபவ் மொகந்தியும் சில படங்களில் ஒன்றாக நடித்தனர்.
நடிப்புடன் அரசியல்
பின்னர் காதலில் விழுந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இரு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டனர். நடிப்போடு அரசியலிலும் ஈடுபட்டு வந்த அனுபவ் மொகந்தி, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
வழக்கு தொடர்ந்தார்
இப்போது அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் அனுபவும் வர்ஷாவும் சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், அனுபவ் மொகந்தி தன்னை கொடுமைப் படுத்துவதாக, அவர் மனைவி வர்ஷா, சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அடித்து உதைப்பார்
அதில், அனுபவ் மொகந்தி குடித்துவிட்டு அடித்து உதைப்பார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்குப் பின், அனுபவ் மொகந்தியும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்யத் தொடங்கினர். விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். என்னை சினிமாவில் நடிக்கக் கூடாது என்று கொடுமை படுத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.
வீடு புகுந்து தாக்குதல்
இந்த விவகாரம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் அனுபவ். இதற்கிடையே நடிகை வர்ஷா, இப்போது, வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும் தன்னை வீடு புகுந்து தாக்கியதாகவும் புரிகாட் போலீஸில் புகார் செய்தார்.
Recommended Video
வாக்குவாத ஆடியோ
தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே அவருக்கும் அவர் கணவருக்கும் இடையே நடந்த வாக்குவாத ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார், எம்.பியும் நடிகருமான அனுபவ மொஹந்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.