Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிவி சீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்: பிக் பாஸ் பிரபலம் திடுக் பேட்டி
ஹைதராபாத்: தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக பிக் பாஸ் பிரபலம் ரோகிணி ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரோகிணி ரெட்டி. அண்மையில் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு அவர் அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் ரோகிணி ரெட்டி கூறியதாவது,
நான் பி.டெக். படித்து முடித்த பிறகு ஹைதராபாத்திற்கு வந்து எஸ்.ஆர். நகரில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். நடிப்பில் ஆர்வமாக இருந்ததால் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முயற்சி செய்தேன்.
ப்ளீஸ்.. நாம் சிறப்பாக செய்தோம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.. வனிதாவை வாரிய சீனியர் நடிகை!
சில தொலைக்காட்சி சேனல்களை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்கத் துவங்கினேன். ஒரு சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றேன். என்னை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட பிறகு நான் கமிட்மென்ட்டுடன் இருக்க வேண்டும் என்று மேனேஜர் தெரிவித்தார்.
கமிட்மென்ட் என்றால் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. அது தெரிந்த பிறகு அந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதே போன்று மேலும் ஒரு இடத்திலும் நடந்துள்ளது. படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்று இல்லை என அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்தேன் என்று ரோகிணி தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது குறித்து நடிகைககள் ஒவ்வொருவராக புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சின்னத்திரையிலும் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டி இருப்பது குறித்து புகார்கள் எழத் துவங்கியுள்ளன.
இவ்வளவு ஏன் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக தொலைக்காட்சி பிரபலம் ஸ்வேதா ரெட்டி மற்றும் நடிகை காயத்ரி குப்தா ஆகியோர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.