சன் பிக்சர்ஸ் சக்சேனா வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது 5 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக சக்சேனா மீது புகார் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ், சண்முக வேல் ஆகிய இருவரும் சமரசம் செய்து கொண்டதால் 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.
மீதமுள்ள 3 வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இது தவிர சக்சேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் மீது மில் அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சக்சேனாவும், அய்யப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சக்சேனா மீதான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications