Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கலாஷேத்ராவில் முறைகேடு... மணிரத்னம் பட நடிகைக்கு எதிராக சிபிஐ வழக்கு
சென்னை: மணிரத்னம் படத்தில் நடித்தவரும் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள கலாஷேத்ரா நிறுவனம், மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கூத்தம்பலம் என்ற ஆடிட்டோரியத்தை சீரமைக்கும் பணி சில வருடங்களுக்கு முன் நடந்தது.
இதில் ரூ.7.02 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய கலாசாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அரசு விதிகளுக்கு எதிராக, ஒப்பந்தம் வழங்கப்பட் டதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலாஷேத்ராவில் அப்போது இயக்குனராக இருந்த லீலா சாம்சன் உட்பட 4 பேர் மீது ஊழல் மற்றும் குற்றச் சதி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற லீலா சாம்சன், சங்கீத நாடக அகாடமியின் இயக்குனராகவும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராக இருந்தவர்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓகே கண்மணி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.