Don't Miss!
- Sports IPL 2024 : இதுக்கா ஐபிஎல் ஆட வந்தோம்.. சோகத்தில் ஆர்சிபி வீரர்கள்.. இனி ஒரு தப்பு நடந்தாலும் சோலி முடிந்தது
- Finance அமேசான் பே கொண்டு வரும் கிரெடிட் ஆப்ஷன்.. இனி ஈசியா பொருள் வாங்கலாம்!
- News "Old Regime vs New Regime.." வரியை சேமிக்க உண்மையிலேயே சிறந்த வழி என்ன.. எளிய விளக்கம் இதோ
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology புது ரூல்ஸ்.. லோயர் பெர்த்தில் செக்.. வயதானோருக்கு முன்னுரிமை.. மற்ற பயணிகள் முன்பதிவு.. ரயில்வே விளக்கம்!
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
கலாஷேத்ராவில் முறைகேடு... மணிரத்னம் பட நடிகைக்கு எதிராக சிபிஐ வழக்கு
சென்னை: மணிரத்னம் படத்தில் நடித்தவரும் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள கலாஷேத்ரா நிறுவனம், மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கூத்தம்பலம் என்ற ஆடிட்டோரியத்தை சீரமைக்கும் பணி சில வருடங்களுக்கு முன் நடந்தது.
இதில் ரூ.7.02 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய கலாசாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அரசு விதிகளுக்கு எதிராக, ஒப்பந்தம் வழங்கப்பட் டதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலாஷேத்ராவில் அப்போது இயக்குனராக இருந்த லீலா சாம்சன் உட்பட 4 பேர் மீது ஊழல் மற்றும் குற்றச் சதி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற லீலா சாம்சன், சங்கீத நாடக அகாடமியின் இயக்குனராகவும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராக இருந்தவர்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓகே கண்மணி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.