Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே!
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி இறந்து ஓராண்டு முடிந்த பிறகு அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகர் ஆனவர் கலாபவன் மணி. மலையாளம், தமிழ் படங்களில் வில்லன், காமெடி கதாபாத்திரம், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி அவர் திடீர் என மரணம் அடைந்தார்.
பண்ணை வீடு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி மணி தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் சாலக்குடி அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் மது அருந்தினார். மது அருந்திய பிறகு அவர் மயங்கி விழுந்தார்.
மரணம்
பண்ணை வீட்டில் மயங்கிய மணியை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 6ம் தேதி உயிர் இழந்தார்.
விஷம்
மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் சகோதரர் போலீசில் புகார் அளித்தனர். பிரேத பரிசோதனையில் மணி அருந்திய மதுவில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
போலீஸ்
மணியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிக்குழு அமைத்து விசாரித்தனர். பலரிடம் விசாரித்து இறுதியில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி விசாரணையை நிறுத்தினர்.
சிபிஐ
கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ மறுத்தது. தாங்கள் ஏற்கனவே பல வழக்குகளை விசாரிப்பதால் இதையும் சேர்த்து முடியாது என்று கூறியது. இந்நிலையில் தான் கேரள உயர் நீதிமன்றம் மணியின் வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.