Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராகவா முதல் அக்கினி குடும்பம் வரை மின்விளக்குகள் இல்லாமல் ஒளிர்ந்தது இந்தியா ...
சென்னை : கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமைய நிரூபிக்க பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்தபடி மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அனைத்து டார்ச் லைட் ,அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை ஏற்றி தங்களின் ஒற்றுமையை காட்டினர் .இதே நேரத்தில் பல பிரபலங்களும் தங்களின் ஒற்றுமையை நிரூபிக்க தங்களின் வீடுகளை விளக்குகளால் ஒலி நிரம்ப செய்துள்ளனர் .
Recommended Video
இதில் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்துடன் தெருவில் இறங்கி டார்ச் லைட் மற்றும் அகல் விளக்கை கையில் ஏந்தி பிரதமர் கூறிய படி தனது கடமையை நிறைவேற்றியுள்ளார் .இதில் ராகவா லாரன்ஸின் அம்மாவும் தனது கையில் உள்ள டார்ச் லைட்டை வானை நோக்கி அடித்து தனது ஒற்றுமையை நிரைவேற்றியுள்ளார் .
மேலும் அக்கினி குடும்பமும் தங்களின் கைகளில் மின் விளக்கை ஏற்றிய படி தங்களின் ஒற்றுமையை நிரூபித்து இருக்கின்றனர்.இதில் நாகர்ஜுனா ,அமலா ,அகில் மற்றும் நாகர்ஜுனாவின் அம்மா ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர் .இந்த புகைப்படத்தின் பதிவில் இருளை நாம் விரட்டியடிப்போம் என்று கூறியுள்ளார் நாகர்ஜுனா .மேலும் இந்தியா கொரோனாவோடு சண்டையிடும் மற்றும் இந்தியா ஒன்றினையும் என்ற ஹாஸ்டேக்குளை பதிவிட்டுள்ளார் .
மேலும் கவர்ச்சி நாயகியான பூனம்பாஸ்வாவும் தனது இன்ஸ்டாகிராமில் தங்களின் வீட்டில் ஏற்றிய மின்விளக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் .
தற்போது வளர்ந்து வரும் நடிகையான மஞ்சிமா மோகன் தனது ஆதரவை தன் வீட்டின் மின்விளக்கு அனைத்தையும் அனைத்து ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி தனது ஒற்றுமையை நிரூபித்து இருக்கிறார் .