Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ராகவா முதல் அக்கினி குடும்பம் வரை மின்விளக்குகள் இல்லாமல் ஒளிர்ந்தது இந்தியா ...
சென்னை : கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமைய நிரூபிக்க பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்தபடி மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அனைத்து டார்ச் லைட் ,அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை ஏற்றி தங்களின் ஒற்றுமையை காட்டினர் .இதே நேரத்தில் பல பிரபலங்களும் தங்களின் ஒற்றுமையை நிரூபிக்க தங்களின் வீடுகளை விளக்குகளால் ஒலி நிரம்ப செய்துள்ளனர் .
Recommended Video
இதில் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்துடன் தெருவில் இறங்கி டார்ச் லைட் மற்றும் அகல் விளக்கை கையில் ஏந்தி பிரதமர் கூறிய படி தனது கடமையை நிறைவேற்றியுள்ளார் .இதில் ராகவா லாரன்ஸின் அம்மாவும் தனது கையில் உள்ள டார்ச் லைட்டை வானை நோக்கி அடித்து தனது ஒற்றுமையை நிரைவேற்றியுள்ளார் .
மேலும் அக்கினி குடும்பமும் தங்களின் கைகளில் மின் விளக்கை ஏற்றிய படி தங்களின் ஒற்றுமையை நிரூபித்து இருக்கின்றனர்.இதில் நாகர்ஜுனா ,அமலா ,அகில் மற்றும் நாகர்ஜுனாவின் அம்மா ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர் .இந்த புகைப்படத்தின் பதிவில் இருளை நாம் விரட்டியடிப்போம் என்று கூறியுள்ளார் நாகர்ஜுனா .மேலும் இந்தியா கொரோனாவோடு சண்டையிடும் மற்றும் இந்தியா ஒன்றினையும் என்ற ஹாஸ்டேக்குளை பதிவிட்டுள்ளார் .
மேலும் கவர்ச்சி நாயகியான பூனம்பாஸ்வாவும் தனது இன்ஸ்டாகிராமில் தங்களின் வீட்டில் ஏற்றிய மின்விளக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் .
தற்போது வளர்ந்து வரும் நடிகையான மஞ்சிமா மோகன் தனது ஆதரவை தன் வீட்டின் மின்விளக்கு அனைத்தையும் அனைத்து ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி தனது ஒற்றுமையை நிரூபித்து இருக்கிறார் .