Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புல்வாமா தீவிரவாத தாக்குதல்: சூர்யா, விக்கி, அக்கி, டாப்ஸி கடும் கண்டனம்
Recommended Video
சென்னை: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
சூர்யா
புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது. நமக்காக மகன், சகோதரர், கணவர் அல்லது தந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் சூர்யா.
|
விக்னேஷ் சிவன்
நம் வீரர்கள் மீது நடந்த தாக்குதலை பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபமும், கவலையும் அடைந்துள்ளார்.
|
அக்ஷய் குமார்
புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து நடிகர் அக்ஷய் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்கிறார்.
|
டாப்ஸி
நம் வீரர்கள் வீரமரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சனைக்கு என் வாழ்நாளிலேயே தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
|
ஹன்சிகா
புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். வீர மரணம் அடைந்த நம் வீரர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.