Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த பாவியை துண்டு துண்டா வெட்டணும்: ட்விங்கிளுக்காக கொந்தளிக்கும் பிரபலங்கள்
Recommended Video
மும்பை: உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி கண்ணை நோண்டி கொலை செய்த கொடூரன்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் 3 வயது சிறுமி ட்விங்கிள் சர்மா கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடன் பிரச்சனையால் சிறுமியை கொன்று அவரின் கண்களை தோண்டி எடுத்து உடலை குப்பை மேட்டில் போட்டுள்ளார்கள். சிறுமியின் உடலை நாய்கள் கடித்துக் குதறிய கொடூரம் நடந்துள்ளது.
முதலில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Dagaalty சந்தானம் எப்பேர்பட்ட 'டகால்டி' தெரியுமா?: இயக்குநர்
|
சிம்ரன்
பேபி ட்விங்கிள் ஷர்மா பற்றிய செய்தி அறிந்து கவலையாக உள்ளது. ஒரு அப்பாவியிடம் இந்த அளவுக்கு கொடூரமாக நடக்க முடியுமா?. உடனே நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிம்ரன். என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் பிஞ்சுக் குழந்தையை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்ய எப்படி தான் மனம் வந்ததோ என்று நெட்டிசன்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
|
ரவீனா டாண்டன்
அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் கண்களை தோண்டி, உடலை சிதைத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும். சட்டம் விரைந்து செயல்பட வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார். #justicefortwinkle
|
குஷ்பு
3 வயது ட்விங்கிள் ஷர்மாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மிருகத்தின் பெயர் முகமது ஜயீத். அந்த ஆள் இஸ்லாமியர் என்ன மனிதனே கிடையாது. அவனை துண்டு துண்டாக வெட்டியோ இல்லை என்றால் வெறி நாய்களிடமோ விட வேண்டும். அந்த பாவிக்கு இரக்கமே காட்டக் கூடாது என்று கோபப்பட்டுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
|
அக்ஷய் குமார்
ட்விங்கிள் ஷர்மாவுக்கு நடந்த கொடூரம் குறித்து அறிந்து அக்ஷய் குமார் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த குற்றத்தை செய்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.