Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்
சென்னை: மவுன அறவழிப் போராட்டம் என்று கூறிவிட்டு திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
போராட்டம்
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலக பிரபலங்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மவுன போராட்டம்
இந்த போராட்டம் மவுன அறவழிப் போராட்டம் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் மேடையில் அறிவித்தார். போராட்டத்தில் நடிகர்கள் விஜய், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, சத்யராஜ், சிவகுமார் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விஜய்
மவுன போராட்டத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த விஜய்யுடன் எஸ்.ஜே. சூர்யா பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்கள் மறுபக்கம் பிசியாக பேசினார்கள்.
சும்மா
சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பிரபலங்கள் போராட்ட களத்தில் அனைவரையும் பார்த்ததும் பேசத் துவங்கிவிட்டனர். தொனத் தொனவென பேசுவதற்கு பெயர் மவுன போராட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்ணாவிரதம்
மவுன போராட்டத்தில் திரையுலகினர் பேசியதை பார்த்தபோது காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் மூக்கு முட்ட சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.