Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது
சென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது என்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெயருக்கு மட்டும் தான் மவுன போராட்டம்.
பேச்சு
தமிழக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் திரையுலகினரோ சீரியஸாக இல்லாமல் போராட்ட பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
போராட்டம்
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்ததை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
விளம்பரம்
போராடுவது என்றால் எங்களுடன் வந்து போராட வேண்டியது தானே. இப்படி பந்தல் போட்டு ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு பெயர் போராட்டமா?. இந்த போராட்டத்தால் ஒரு பலனும் இல்லை. நீங்கள் விளம்பரம் தேட மக்கள் பிரச்சனை தான் கிடைத்ததா என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேடை
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மேடையில் அமராமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்து காவிரி பற்றி பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதை மனதில் வைத்து நைசாக நழுவினார்.
பெயருக்கு போராட்டம்
மக்களுக்காக நாங்களும் போராடினோம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக பெயருக்கு நடந்த மவுன போராட்டம் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.